மட்/மமே/கன்னன்குடா மகா வித்தி்யாலயத்தில் க.பொ.த(சா/த) கற்கும் மாணவர்களின் அடைவுமட்டத்தை அதிகரிக்கும் முகமாக பாடசாலையின் SPU குழுவினரால் ஆரம்பிக்கப்பட்ட,50 நாள் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு பாடசாலையின் அதிபர் தலைமையின் கீழ் SPU வேலைத்திட்டத்தின் பொறுப்பாசிரியர் திரு.அ.திரவியராஜா ஆசிரியரின் ஒழுங்கமைப்பில் வைபக ரீதியாக 26.09.2015 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் பிரதமஅதிதிகளாக மட்டகளப்பு மேற்கு கல்வி வலயத்தை சேர்ந்த திரு.ஹரிஹரராஜ் (பிரதி கல்விப்பணிப்பாளர்-கல்வி அபிவிருத்தி),திரு.சோமசுந்தரம்(கோட்ட கல்விப்பணிப்பாளர்) ஆகியோர் கலந்துகொண்டனர்.அத்துடன் இப்பாடசாலையின் பாடசாலை சங்க செயலாளர்,பாடசாலைக்குழு உறுப்பினர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர்,பழைய மாணவர்கள் என பெரும்திரளானோர் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை இச்செயற்திட்ட குழுவினருக்கு தெரிவித்தனர்.
|